"சிலிர்ப்பூட்டும் சில் சிறகாய் நீ
உருமாறா சீர் சிறகாய் நீ
உயர் பறக்கும் எண்ணச்சிறகாய் நீ
உயிர் காக்கும் உயிர்ச்சிறகாய் நீ
துன்ப நதியில் - போரிட்டு, மேல் நிற்கும் தனிச்சிறகாய் நீ
காற்றோடு கலந்தோடும் கற்பனைச்சிறகாய் நீ
சுற்றித்திரியும் சுதந்திரச்சிறகாய் நீ
மேன்மை பெற்ற மென்சிறகாய் நீ
அசைந்தாடும் மகிழ்ச்சிறகாய் நீ
அழகூட்டும் அக அழகியாய் நீ!"
உரைத்தது உன் உருகொள்ள துடிக்கும்
'என் மனச்சிறகு'
5 comments:
Totally a good one . Hey way to goooo Priya .:):)
I liked this உயர் பறக்கும் எண்ணச்சிறகாய் நீ
உயிர் காக்கும் உயிர்ச்சிறகாய் நீ .
"வண்ணச்சிறகுகளை, உன் எண்ணச் சிறகுகளை விரித்து அமைதியை தேடி அலையும் நெஞ்சமே, எந்த ஒரு நிலையிலும் சவால்களை திடமான , கலங்காத மனதோடு எதிர் கொள்பவர்களுக்கே அது கிட்டும் என அறிவாயாக, பேதையே."
nattu uncle
velachery
@Karthik and Natrajan uncle
Thanks a lot :)
Thought-stirring!!!!
Thanks Shilpa :)
Post a Comment